திங்கள், 2 பிப்ரவரி, 2026

ஆலய அமைப்பும் தொழுகின்ற விதிமுறைகளும்

 ஆலயம் என்பது ஆன்மா லயப்படுவதற்குரிய இடம் அதாவது ஆணவமலம் அடங்குவதற்குரிய இடம் கடவுள் என்னும் பெயர் மனம்; மொழி; மெய் ஆகியவற்றை கடந்து நிற்பதாகும் :ஆலயங்களில் விதிக்கப்பட்ட ஆலய அமைப்பு இரண்டு வகைப்படும் :ஒன்று நம் உடல் அமைப்பை ஒட்டியது: மற்றொன்று நம் இதய அமைப்பை ஒட்டியது:: திருத்தலங்கள் நம் உடம்பு போல் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை சீக்கிரம் சரீரம் பிரச்சாரம் என்பர்: இதனையே திருமூலர்

;; உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே ;;

என்கிறார் :

ஆகம விதிப்படி ஆலயங்கள் கர்ப்பகிரகம் ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம் ;நந்தி; பலிபீடம்; கொடிமரம் ;யாகசாலை முதலியவற்றுடன் அமைந்துள்ளன பிண்டமாகிய உடலில் தலை; கழுத்து: மார்பு: நா:டி பாதம் என 5 பிரிவுகள் உண்டு :புருஷ வடிவாக விளங்கும் சிவாலயத்தை நம் உடலோடு ஒப்பிடும் போது முதலாவதாக கர்ப்பகிரகம் தலை ஆகவும் இரண்டாவதாக அர்த்த மண்டபம் கழுத்தாகவும் மூன்றாவதாக மகா மண்டபம் மார்பாகவும் நான்காவதாக யாகசாலை நாடியாகவும் ஐந்தாவது கோபுரம் பாதங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன: நமது உடலில் ஆலயமாக உடலும் கோபுரமாக வாயும் நந்தியாக நாக்கும் துலஜஸதம்பமாக அண்ணாக்கும் தீபங்களாக பஞ்சேந் திரியங்களும் கர்ப்பக்கிரகமாக இதயமும் சிவலிங்கமாக உயிரும் காட்சியளிக்கின்றன: உடலில் தன்மயகோசம் பிராணமய கோஷம் ;மனோமய கோசம்;விஞ்ஞானமய கோசம் ;ஆனந்த மயகோஷம் போலவும் தூலசரீரம்; சூக்கும சரீரம் ;குணசரீரம்; கஞ்சுகசரீரம் கிராணசரீரம் போல ஐந்து பிரகாரங்களும் ஐந்து சபைகளும் உள்ளன: உடலில் உள்ள ஆதிரங்கள் போல கர்ப்ப கிரகம் அர்த்தமண்டபம் முதலியன உள்ளன:; மேலும் இவ்வாலயங்களில் பொதுவாக ஏழு வகைப் பொருட்களால் ஆனது :நம் உடலும் தோல் :இரத்தம்; நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது :




ராஜகோபுரம்

----------------ä

பெரிய கோவில் ஒன்று அமைத்து அதற்கு வாயில் ஒன்று வைக்கப்படுகின்றது :அந்த வாயிலுக்கு மேல் உயர்ந்த கோபுரம் ஒன்று அமைக்கப்படுகின்றது: கோவிலில் உள்ள ஏனைய கோபுரங்களை விட ராஜகோபுரம் மிக உயர்ந்தது :நெடுந்தொலைவில் இருந்து பார்த்தால் கம்பீரமாக காட்சி அளிக்கும் இது தூல லிங்கமாகும் :வெகு தொலைவிலையே கண்ணீல் படும்போது தெய்வ சுருபமாகவே எண்ணி வணங்குவர் :கோபுர தரிசனம் கோ டி புண்ணியம் என்றும் கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்றும் சொல்லப்படுகின்றது :ராஜ கோபுரத்தில் பல்வேறு வகை சிற்பங்கள் தெய்வ வடிவங்கள் :: பட்சிகள் ;மிருகங்கள் ;:புராண இதிகாச வரலாறு அமைப்புகள் ;மானிட வடிவங்கள் ;மெய்யடியார்கள் மற்றும் ஏனைய வடிவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்; இதன் தத்துவார்த்தம் யாதெனில் பிரபஞ்ச அமைப்பில் இவை யாவுக்கும் இடம் உண்டு என்பது கோட்பாட்டு விளக்கம் :விலங்கினம் ;மக்களினம் ;; தேவர் இனம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளார்கள்: அண்டத்தில் இதுதான் உள்ளது இது இல்லை என்று எவராலும் பாகுபடுத்த முடியாது என்ற கோட்பாட்டை ராசு கோபுரம் விளக்கின் நிற்கிறது :ராசுகோபுரத்தின் மேல்நிலை பொதுவாக ஒற்றைப்பட எண்ணில் அமைந்திருக்கும்: 3 ;5; 7; 9; 11 என்றவாறு அதில் அமைந்துள்ளது நிலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக பெருகிக் கொண்டே போகும் ராசகோபுரத்தின் மூன்று நிலைகள் ஆவன சாக்கிரம் ;சொப்பனம் ;சுளுத்தி என மூன்று அவத்தைகளை குறிக்கும் ;ராச கோபுரத்தின் ஐந்து நிலைகள் ஐம்பொறிகளை குறிக்கும்; ராசகோபுரத்தில் நிலைகள் ஐம்பொறிகளோடு மனம் புத்தி இரண்டும் சேர்ந்து குறிக்கப்படுகின்றன: ராசகோபுரத்தின் ஒன்பது நிலைகள் இந்த ஏழினோடு சித்தம் தருமகாரம் என இரண்டும் சேர்ந்தது ஆகும் :பஞ்சேந் திரியங்களை கொண்டும் மனம் புத்தி முதலியானவற்றைக் க் கொண்டும் புற உலகை அறிகின்றோம் :புற உலகை அறிகின்ற செயலை அப்படியே நிறுத்திவிட்டு மனதை துணையாக கொண்டு பரம்பொருளிடத்திலும் பயணம் போக வேண்டும்எ ன்னும் கோட்பாட்டை ராசகோபுர வாயில்கள் வழியே பண்ணும் பிரவேசம் நமக்கு விளக்கி காட்டுகிறது



பலிபீடம் 

--------------

 ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும் நம் கண்ணுக்கு புலப்படுவது பலிபீடம் அதன் அருகில் சென்று விழுந்து வணங்கி வழிபடும் இடத்தில் மனதில் விழும் தூய எண்ணமே மிக முக்கியமானது -ஒருவரின் கீழான எண்ணங்கள் இச்சைகள் அனைத்துமே அவன் அவ்வாறு வணங்கும் போது பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகின்றது. -இவ்வாறு பலியிட்ட பின் தூய சிந்தனை மேலான எண்ணத்துடன் அவன் வேண்டும் .அங்கு மனிதத்தன்மை வாய்ந்த மனிதன் எழுந்திருக்கின்றான் என்ற எண்ணம் வலிமை பெறுகின்றது .இந்த எண்ணத்தின் சக்தி அவன் புதிய ஒரு பிறவி எடுத்ததற்கு சமனாகின்றது. பலிபீடம் பத்திரலிங்கம் ஆகும் ö


கொடிமரம்

--------------------

பலிபீடத்தை அடுத்துள்ளது கொடிமரம் .இது கோபுரம் அல்லது விமானத்தைப் போன்றது. மேலாக நந்திக்கு எதிரிலோ அல்லது பின்னலோ சில கோயில்களில் காணப்படும். இதுவே ஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் மூலவரை நோக்கி இருக்கும். உயர்ந்தும் கொடிமரம் இவ்வாறு நேராக இருக்கிறதோ அதேபோல் உடல் நேராக இருக்க வேண்டும். இதன் உயரம் விமானத்துக்கு சமமாகவோ அல்லது அதன் முதல் மாடி போன்ற பகுதிகளுக்கு சமமாகவோ இருத்தல் வேண்டும் .இதன் அதிதேவதை சிவன் .ஆகவே இது சிவனைக் குறிக்கும். இதனை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். சதுரமான அடிப்பகுதி, எண்கோண வீதி போன்ற அமைப்பு. ,உருளை போன்ற தடித்த உயரமான மரம்..சதுரமான அடிப்பகுதி பிரம்மாவையும் ,ண் கோண வீதி போன்ற பகுதி விஷ்ணுவையும் ,உருளை போன்ற தடித்த உயரமான மரம் உருத்திரனையும் குறிக்கும். ன ஆகமங்கள் சொல்கின்றன .கொடிமரத்தின் ஏனைய பாகங்களான மூன்று குறுக்கு கட்டைகள் இச்சாசக்தி ,கிரியாசக்தி ,ஞானசக்தி குறிக்கும். . இந்த குறுக்குத் தண்டுகள் சூரியன் சந்திரன் ஆக உள்ளன..கொ டியேற்றக்கயிறு =அணுக்கிரகசக்தி, கொடி= வாயு, கொடியில் வரையப்படும் நந்தி= ஆன்மா கும். த்ஸ்தம்பம் சைவாகங்களில் குறிப்பிடும்போது மூன்று பொருட்களான பதி ,சு,பாம் என்பதாகி உள்ளன..பத்தி இவாறு பாசத்தை ஒழித்து இறையருளுடன் சிவனை அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது.


யாகசாலை

--------------------------

இது 36 தத்துவ ஸ்வரூபமாகவும் சிவபெருமானது அட்ட மூர்த்தி வடிவமாகவும் கூறப்படும்.தியாகசாலையில் 9 குண்டங்களில் அக்கினி வளர்க்கப்படும் .அவை நாற்கோணம் ,முக்கோணம் , அர்த்தசாஸ்திரம் முதலிய வடிவங்களில் காணப்படும் ,.குண்டங்கள் சுற்றி பசு ந்தரப்பைகளை பரப்பி ஆல் , அரசு முதலிய சமித்துகளை குண்டத்தில் கடைந்தெடுக்கப்பட்ட சுத்தமான அக்னி கொண்டு அதற்குரிய மந்திரங்களை சொல்லி அதில் தெய்வங்களை மனதில் தியானித்து சிரிச்சுருவம், சிருக்கு, சிருவம் என்னும் கருவிகளை கொண்டு நெய் சொரிந்து தீ வளர்க்கப்படும் .மந்திரம் ,கிரியை ,பாவனை என்ற மூன்றாலும் வழிபாடு நிகழும். ஓம குண்டலத்தில் இருந்து எழுகின்ற புகையும் வேதம் , சிவாகமங்கள் ,திருமுறை ஒலிகளும் அன்பர்களின் நல்லெண்ணங்களும் எங்கும் வியாபிக்கின்ற இறைவனது அருட்சத்தி தூண்டி உலகெங்கும் பரவச் செய்து நன்மைகளை உண்டு பண்ணும்


நந்தி

------------------------

ஒரு ஆலயத்தில் சிவலிங்கம், நந்தி , பலிபீடம், கொடிமரம் ஆகிய வரிசையில் இருக்கக் காணலாம். நந்தி கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவனை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறது .இது சிவனின் வாகனம் .வாகனம் எதுவாயினும் அது ஜீவான் மாவைக் குறிக்கிறது. மூலப் பொருளான இறைவனை பார்த்த வண்ணமாக உள்ளது.ஜீவான்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பதுதான் .அந்தக் கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்தி பெருமான் சிவனை நோக்கி இருக்கின்றார் அல்லது சிவன் ஆலயம் அல்லாத கோவில்களில் நந்தியாக மயில், எலி, சிங்கம், நாய் என்பன அமைந்திருக்கும் ..ஆகவே பக்தர்கள் வலம் வரும் போது நந்திக்கு குறுக்கே செல்லாமல் அதை சுற்றித்தான் வலம் வர வேண்டும்: இந் நந்தியின் உத்தரவு பெற்று கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே விதி :

பிரகாரம்

------------------

ஆலயத்தில் ராசகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் பிரகாரங்கள் உள்ளன: ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள பிரகாரங்கள் அவ்வாலய வரலாற்றையொட்டி பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன:: இத்தகைய பிரகாரங்களின் மதில் சுவர்கள் இறைவனை மறைத்துக் கொண்டிருக்கின்றன: எந்த திசைகளில் இருந்தும் இறைவனை காண முடிவதில்லை :பிரதான வாயில் எனப்படும் ராசகோபுரம் வழியாகத்தான் உள்ளே சென்று நாம் இறைவனை வழிபட முடிகிறது: ஐந்து பிரகாரங்கள் உள்ள கோயில் ;மூன்று பிரகாரங்கள் உள்ள கோயில் ;ஒரே ஒரு பிரகாரம் உள்ள கோயில் என்று ஆலயங்களை காணக் கூடியதாக இருக்கும்: ஐந்து பிரகாரங்கள் அன்னமயம் ; பிராணமயம் ;மனுமயம் ;விஞ்ஞானமயம் ;ஆனந்தமயம் எ ன்னும் ஐந்து வித கோஷங்களை குறிக்கும்:மூன்று பிரகாரங்கள் என்றால் துருல ; சூட்சும ; காரணம் என்னும் மூவகை உடம்புகளை குறிக்கும் :கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை ;ஐந்து முறை பிரகாரங்களை சுற்றி வலம் வர வேண்டும் என்ற விதிமுறை மூவகை உடம்பையும் ஐந்துவித கோஷங்களையும் கடந்து இறைவன் விளங்குகிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது:



பிரதட்சணம் செய்தல் /வலம் வருதல்
ஆலயத்தில் உள்ள பிரகாரங்களில் பிரதட்சம் செய்தால் உண்டாகும் பலன்கள் பின்வருமாறு .
காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும் .பகலில் வலம் வந்தால் விருப்பம் அளிக்கும் .மாலையில் வலம் வந்தால் பாவங்கள் தீரும். அர்த்த சாமத்தில் வ ல ம் வந்தால் மோட்ச சித்தி கிடைக்கும் .விநாயகருக்கு ஒரு முறையும், சூரியனுக்கு இரண்டு முறையும் ,சிவனுக்கு மூன்று முறையும் வம் லாம். சாத்திர ரீதியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் (விதிபிரமாணப்படி ) மணி அடிப்ப து, வேதகோஷம் ,தேவாரம். மேளம் என்று குறிக்கப்பட்டுள்ளதாது ஆலயம் அமைதியின் இடம் அடிப்படையில் இதனை உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டும் இந்த த்துவம் ஒவ்வொருவரும் அறிய வேண்டியதுண்டு .
மூலவர்
--------------
மூலவர் என்பவர் கர்ப்க்கிரகத்தில் உள்ள சிவலிங்கம் ஆகும் .இது வெவ்வேறு ஆலயங்களில் வேறுபடும் .முருகனைக் குறிக்க வேலாயுதமும், சிவனை, அம்மனை குறித்த கோயில்களில் சூலமும் காணப்படுவதுண்டு. மூலவரை தரிசிக்க கருவறை வாயில் எழுந்துள்ளிருக்கும் துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் .லிங்கம் என்பதற்கு குறி என்று பொருள். குறி என்றால் அடையாளம் .அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம் என்றும் அவ்வாறு ஒடுங்கிய அப்பொருள் உள்ளவன் மீத் தோன்றுவதற்கு உரிய இடம் எனவும் பொருள் கூறுவர் .காண முடியாத இறைவனை காணுவதற்குரிய அடையாளமே சிவலிங்கமாகும்.
மகா மண்டபம்
------------------
நந்தியின் அருகில் நின்று மூலவரை கண்டு வணங்கிய அடியவர் அடுத்துள்ள மகா மண்டபத்திற்குள் செல்கிறார் .ஆசாரியர் குருக்கள் எனக் கூறப்படும் அவர்கள் உள்ள இடம் மகா மண்டபம். ஆலய வழிபாடு புரிவோர் தம்முடன் தேங்காய், வெற்றிலை, பாக்கு,பழம் ,கற்பூரம் ,, பூக்கள் ஆகியவற்றை , எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஆகம விதி .இவற்றை எடுத்துச் செல்லும் அடியவர் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் ஆன்மலிங்கமாகிய குருக்களிடம் அளிக்க வேண்டும் .குருக்கள் இவற்றைக் கொண்டு செய்யும் ஆராதனையும் ஓர் தத்துவத்தை விளக்கும். இங்கே ஒரு விளக்கம்கொடுக்கப்படுகிறது .அது தேங்காய் வழிபட செல்லும் ஆன்மாவை குறிக்கும். இதில் உள்ள மூன்று கண்கள் மும்மலங்களான ஆணவம் ,கன்மம் ,மாயையைக்குறிக்கும் .தேங்காய் ஓடு ஆன்மாவின் பாவங்களை குறிக்கும் .பாவங்களின் கடினத் தன்மையை எடுத்துக் கூறுகின்றது. தேங்காய் பருப்பு ஆன்மாவை குறிக்கும் .தேங்காய் உடைக்கும் கருவி ஆன்ம விடுதலைக்கு தேவையான இறைவனது திருவருளைக் குறிக்கும் .பழங்கள் அடியவரின் நல்வினை பலன்களை குறிக்கும்.கற்பூரம் இறைவனோடு இரண்டற கலக்கும் பக்குவம் வாய்ந்த ஆன்மநிலையை உணர்த்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக